Tuesday, June 15, 2010

இந்திய ஆட்சிப்பணி - ஒரு பார்வை


இந்திய திருநாட்டை வழிநடத்தி செல்வதும், இந்தியாவின் முதுகெலும்பாக இருந்து செயல்படுவதுமான இந்திய ஆட்சிப் பணி. நாட்டின் மிக உயந்த கவுரவமிக்க பணியாக கருதப்படுகிறது. அரசு இயந்திரத்தை முழுவதுமாக செயல்பட வைக்கும், இத்தகைய பணிகள் எப்பொழுதும் சவால் நிறைந்ததாகவே இருக்கின்றன. அதிகாரம், கவுரவம், சமுதாயத்தில் உயர்மதிப்பு, மரியாதை அரசுப்பதவி போன்ற காரணங்களால், இன்றையக்கும் பல இளைய தலைமுறையினர் இந்திய ஆட்சிப் பணியை தம் இலட்சியமாகக் கொண்டுள்ளனர்.

இலட்சங்களில் சம்பளம் வாங்கும் கணிப்பொறி, மேலாண்மை வல்லுனர்கள் கூட இப்பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர். காரணம், இது அளிக்கும் சமுதாய அந்தஸ்து, இது அளிக்கும் திருப்தி- மன நிறைவு, பணி பாதுகாப்பு, சவால்கள் நிறைந்த பல பதவிகளை வகிக்கும் வாய்ப்பு, நாட்டின் வளர்ச்சியில் நேரடியாக பங்கு கொள்ளும் வாய்ப்பு, மக்களுக்காக பணியாற்றுவதற்கானதொரு வாய்ப்பு இப்படி ஏராளம், ஏராளம். உண்மையில், நாட்டின் சட்ட திட்டங்களை உருவாக்குவதும், அதனை செயல்பட வைப்பதும் இத்தகைய இந்திய ஆட்சிப் பணி - அதிகாரிகளே. சவால்கள் நிறைந்த உலகிற்கு உங்களை அழைத்துச் செல்வதற்கான வழிதான் இந்த இந்திய ஆட்சிப் பணி . முதன்மைச் செயலாளர், மாவட்ட ஆட்சித் தலைவர், ஆணையாளர், போன்ற பல உயர்பதவிகளை வகிக்க, நாட்டை வழிநடத்திச் செல்ல துணைபுரியும் வழிதான் இந்த இந்திய ஆட்சிப் பணி .

தகுதி :-

தேசியம் (Nationality) :
  • இந்திய ஆட்சிப் பணி(IAS), இந்திய காவல் பணி (IPS) பணிகளுக்கு தேர்வு எழுதுபவர் இந்திய குடிமகனாக கட்டாயம் இருத்தல் வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு, தேர்வு எழுதுபவர் கீழ்க்கண்ட ஒருவராக இருத்தல் அவசியம்.
      • இந்திய குடிமகன் (அல்லது)
      • நேபாளில் பிறந்தவர்; (அல்லது)
      • பூடான் குடிமகன்
வயது வரம்பு (Age Limit)

21-வயதிலிருந்து 30-வயதிற்குட்பட்டவறாக இருத்தல் வேண்டும்.

மேற்குறிப்பிட்ட உச்ச வயது வரம்பு சில பல தளர்வுகளை கொண்டது. அவையாவன :

SC, ST - அதிகபட்சமாக - 5 ஆண்டுகள்
OBC - அதிகபட்சமாக - 3 ஆண்டுகள்.
போரில் காயம்பட்ட இராணுவ வீரர்கள் -5 ஆண்டுகள்.
குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ வீரர்கள்- 5 ஆண்டுகள்.
பார்வையற்றோர், காது கேளாதவர், உடல் ஊனமுற்றவர்- 10 ஆண்டுகள்.

குறைந்தப்பட்ச கல்வித் தகுதி :

பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பது அவசியம், இறுதியாண்டு மாணவர்கள், முதனிலைத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். ஆனால், முக்கியத்தேர்வு எழுதும் போது, இளங்கலை தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு எண்ணிக்கை :

(பொதுப்பிரிவினர்) General - 4
SC, ST - No limit
OBC - 7

குறிப்பு :
  • முதனிலைத் தேர்வு எழுதினால் அதுவும் ஒரு தேர்வு எண்ணிக்கையாக எடுத்துக்கொள்ளப்படும்.
  • முதனிலைத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தை எழுதினாலும்அதுவும் ஒரு தேர்வுஎண்ணிக்கையாக கணக்கில் கொள்ளப்படும்.
  • தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டாலோநிராகரிக்கப்பட்டாலோ அதுவும் ஒருதேர்வு எண்ணிக்கையாகவே கணக்கில் கொள்ளப்படும்
தேர்வு விவரம்:-

இது இரண்டு படி நிலைகளை கொண்டது.

• முதனிலைத்தேர்வு (கொள்குறி வகை, முக்கியத் தேர்வுக்கான மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்காக)
• முக்கியத்தேர்வு (ம) நேர் காணல்

முதனிலைத்தேர்வு :

இத்தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. (கொள்குறி வகை) மொத்தம் 450 மதிப்பெண்களுக்கான இத்தேர்வில், பொது அறிவு (150 மதிப்பெண்) மற்றும் விருப்பப்பாடம் 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்பட்டா. இத்தேர்வு, முக்கியத் தேர்வுக்கான மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு மட்டுமே.

முதனிலைத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களே, முக்கியத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். மொத்த காலியிடங்களைப் பொறுத்து, 12 முதல் 13 மடங்கு மாணவர்கள், முக்கியத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

• அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் இருக்கும்.
• வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும்.
• தேர்வுக்கான பாடத்திட்டம், இளநிலை பாடத்திட்டத்தை ஒத்ததாக இருக்கும்

முதனிலைத்தேர்வு- முதல் தாள்

1. பொது அறிவியல்
2. உள்நாட்டு (ம) பன்னாட்டு நடப்புச் செய்திகள், முக்கிய நிகழ்வுகள்
3. இந்திய வரலாறு மற்றும் ஐனெயைn யேவழையெட ஆழஎநஅநவெ (சுதந்திர போராட்டம்)
4. இந்திய மற்றும் உலக புவியியலமைப்பு
5. இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரம்
6. பகுத்தறியும் திறன்.

போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இவையனைத்தும், இளநிலை தரத்திலான, கொள்குறி கேள்விகளாக இருக்கும்.

அனுமதிக்கப்பட்ட விருப்பப் பாடங்களாவன :-

Agriculture
Animal Husbandry & Veterinary Science
Botany
Chemistry
Civil Engineering
Commerce
Economics
Electrical Engineering
Geography
Geology
Indian History
Law Mathematics
Mechanical Engineering
Medical Science
Philosophy
Physics
Political Science
Psychology
Public Administration
Sociology
Statistics
Zoology

முக்கியத் தேர்வு :-

இத்தேர்வு இரண்டு நிலைகளைக் கொண்டது.
• எழுத்துத் தேர்வு
• நேர்காணல்

எழுத்துத் தேர்வு

மொத்தம் 9 தாள்களைக் கொண்ட இத்தேர்வில் விரிவான விடைளித்தல் வகையில் இருக்கும் (கட்டுரை வடிவில்)

தாள் - I - 18-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு இந்திய மொழி 300 Marks.
தாள் - II - English (Qualifying தாள்)
தாள் - III - Essay (பொது கட்டுரை)
தாள் -IV&V - பொது அறிவு - 600 (இரண்டு தாள்கள்)
தாள் -VI&VII VIII, IX - ஏதேனும் இரண்டு விருப்பப்பாடம் (ஒவ்வொரு பாடத்திலிருந்தும் இரண்டு தாள்கள்) (விருப்பப்பாடம் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது) -1200

Agriculture
Animal Husbandry and Veterinary Science
Anthropology
Botany
Chemistry
Civil Engineering
Commerce & Accountancy
Economics
Electrical Engineering
Geography
Geology
History
Law
Arabic
Assamese
Bengali
Bodo
Chinese
Dogri
English
French
German
Gujarati
Hindi
Kannada
Kashmiri
Konkani
Maithili
Malayalam
Manipuri
Marathi
Nepali
Oriya
Pali
Persian
Punjabi
Russian
Sanskrit
Santali
Sindhi
Tamil
Telugu
Urdu
Management
Mathematics
Mechanical Engineering
Medical Science
Philosophy
Physics
Political Science and International Relations
Psychology
Public Administration
Sociology
Statistics
Zoology


எழுத்துத்தேர்வு - 2000
நேர்காணல் - 300

மொத்த மதிப்பெண் - 2300

குறிப்பு :

1) எழுத்துத்தேர்வினை 8-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியில் எழுதலாம். (ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தமிழிலேயே எழுதலாம் நேர்காணலில் கூட தமிழிலேயே பதிலளிக்காலம்).

2) மொழிப்பாட வினாத்தாட்கள் மொழி + ஆங்கிலம் பத்தாம் வகுப்பு தரத்திலாக இருக்கும். இப்பாடங்களில் பெறும் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. தகுதி பெறுவதற்கான அடிப்படைத் தேர்வு மட்டுமே.

3) மொழிப்பாடங்களில் தேர்வுக் குழுவினரால் நியமிக்கப்படும் குறைந்த பட்ச மதிப்பெண்களை பெற்றால் மட்டுமே கட்டுரை பொது அறிவு மற்றும் விருப்பப்பாட விடைத்தாள்கள் திருத்தப்படும்.

4) கீழ்கண்ட குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களின் சேர்க்கை அனுமதிக்கப்படுவதில்லை.

Political science International X Public Administration.
Relations.

Commerce and Accountancy X Management
Anthropology X Sociology
Mathematics X Statistics
Agriculture X Animal Husbandry &Veterinary Science
Management X Public Administration.

Civil X Electrical X Mechanical

Veterinary Science X Medical Science.

நேர்காணலுக்கு தயாராவது எப்படி?

இந்திய குடிமைப் பணிக்கான இறுதி தேர்வு நேர்காணல் ஆகும். மிக முக்கியமான கட்டமும் கூட. UPSC-யினால் நியமிக்கப்படும் நேர்காணல் குழு இத்தேர்வினை நடத்தும். நேர்காணலுக்கு அழைக்கப்படும் மாணாக்கரின் விவரமனைத்தும் (கல்வி + பணி அனுபவம் இருப்பின் + ஊர் + மாநிலம் + மொழி + . . . . + . . . . ) ஏற்கனவே இக்குழுவினரிடம் அளிக்கப்பட்டிருக்கும். நேர்காணல் மாணவரிடம் பொதுவான கேள்விகளே கேட்கப்படுகின்றன. அன்றாடம் தம்மைச் சுற்றி நிகழும் நிகழ்ச்சிகளிலிருந்து தான் அதிக கேள்விகள் கேட்கப்படும். ஒரு சூழ்நிலையை அல்லது நேர்காணல் குழு குறிப்பிடும் சூழ்நிலையை தேர்வர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே நேர்காணலின் முக்கிய நோக்கமாகும். இச்சூழலை எப்படி புத்திசாலித்தமனமாகவும், சுயோகிதமாகவும், எதிர்கொள்கிறார் என்பதே அதிகமாக பரிசோதிக்கப்படுகிறது. தேர்வருடைய புத்திக்கூர்மையை பரிசோதிக்கும் அதே நேரத்தில், தேர்வர் எந்த அளவிற்கு நாட்டு நடப்புகளை அறிந்து வைத்துள்ளார் மற்றும் அதனைப்பற்றியதான் அவருடைய கருத்து மற்றும் மனநிலை என்ன என்பதும் கணக்கில் கொள்ளப்படுகிறது. ஒரு சார்பாக செயல்படுகிறாரா அல்லது நடுநிலையாக செயல்படுகிறாரா, கடினமாக சூழ்நிலையை எவ்வாறு அணுகுகிறார். தலைமைப்பண்பு எப்படி, நேர்மைத்தன்மை, உண்மை, உணர்வு எப்படி, ஒரு துறையைப் பற்றியதான பார்வை மற்றும் ஆழான அறிவு, சமயோகிதத்தன்மை போன்றவை பரிசோதிக்கப்படுகின்றன.

இவை வெறும் குறுக்கு விசாரணை போன்று நடைபெறுவதன்று, எதார்த்தமான மற்றும் ஆரோக்கியமான விவாதமாக தேர்வரின் அறிவுத்திறனை வெளிக்கொணரும் விதத்தில் இருக்கும்.

எழுத்துத் தேர்வின் முக்கிய நோக்கம்.

தேர்வின் பகுத்தறியும் திறன் மற்றும் ஆழமான நுண்ணறிவினை பாpசோதிப்பதே எழுத்துத் தேர்வின் முக்கிய நோக்கமாகும் விருப்பப்பாடம் மற்றும் பொது அறிவு பாடங்களில் அவா; எத்தகைய புலமை பெற்றிருக்கிறார் என்பதை கண்டறிவதை இதன் முக்கிய நோக்கமாகும். வெறும் மனப்பாடமா அல்லது உண்மையறிவா என்பது இங்கே எடைப்போடப்படும்.

பாடத்திட்டம் இளநிலை தரத்தைவிட சற்று உயா;ந்ததாகவே இருக்கும். முதுகலை பாடத்திட்டத்திற்கு சற்று இணையாகவே இருக்கும். பொறியியல் பாடத்தினை பொறுத்தவரை, இளநிலை தரத்திலேயே இருக்கும். விருப்பப்பாடங்களில் மொத்தம் எட்டு வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களுக்கும் சமமான மதிப்பெண்கள் வழங்கப்படும்.

ஒவ்வொரு வினாக்களும் இரண்டு பகுதிகளாக பிhpக்கப்பட்டிருக்கும். பகுதி - அ, பகுதி - ஆ, ஒவ்வொரு பகுதியிலிருந்தும் (4) வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். எட்டு (8) வினாக்களிலிருந்து, ஐந்து (5) வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒரு வினா கட்டாயமாக பதிலளிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

Monday, June 14, 2010

காந்தி செய்த துரோகம்-2




ஒருக்கால், இர்வின் பிரபு கூறிய மாதிரி, மாநாட்டுக்குப் பிறகு தூக்குத்தண்டனை என்று வைத்திருந்தால், பெரிய குழப்பம் ஏற்பட்டு, காந்தி-இர்வின் ஒப்பந்தம் நிறைவேற, பகத்சிங்கின் தண்டனையைக் குறைப்பது ஒரு நிபந்தனையாக்கப்பட்டிருக்கலாம், ஆனால் காந்தியார் கூறியபடி, மாநாட்டுக்கு முன்பே தூக்கிலிடப்பட்டுவிட்டதால், வெறும் இரங்கல் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி விட்டு, ஒப்பந்தததை மாநாடு ஏற்றுக் கொண்டுவிட்டது. பகத்சிங் கொல்லப்பட்ட மறு வாரமே, "குடியரசு" பத்திரிகையில் 'பகத்சிங்' என்ற தலைப்பிட்டு ஒரு தலையங்கம் வெளியிட்டது. அந்தத் தலையங்கம் அன்றைய அரசியல் சூழ்நிலை பற்றியும், காந்தியைப் பற்றியும் பல கருத்துக்களை முன்வைக்கிறது. அத்தலையங்கத்திலிருந்து சில பகுதிகள்:-

"அவர்கள் (காங்கிஸார்) சர்க்கார் தலைவரான மேன்மை தாங்கிய ராஜப் பிரதிநிதி திரு.இர்வின் பிரபு அவர்களைப் பாராட்டுவதும்,அவரிடம் பேசி முடிவு செய்து கொண்ட இர்வின் பிரபு , திரு.காந்தி அவர்களைப் புகழ்வதும், பகத்சிங்கைத் தூக்கிலிடக் கூடாது என்கின்ற நிபந்தனையில்லாத ராஜி ஒப்பந்தத்தைப் பற்றி மிக்க திருப்தியடைந்திருப்பதோடல்லாமல், அதை ஒரு மிகப் பெரிய வெற்றியாகக் கருதி, வெற்றிக் கொண்டாட்டங்கள் கொண்டாடுவதுமான காரியங்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வளவோடு மாத்திரமில்லாமல்,திரு.காந்தி அவர்கள், திரு.இர்வின் பிரபுவை மகாத்மா என்று கூறி, அப்படியே அழைக்கும்படியாக, தேச மகா ஜனங்களுக்குக் கட்டளையிடுவதும், திரு,இர்வின் பிரபு அவர்கள், திரு.காந்தியவர்களை ஒரு பெரிய மகான் என்றும், தெய்வத் தன்மை பொருந்தியவர் என்றும், வெள்ளைக்காரக்கள் அறிய விளம்பரம் செய்வதுமான காரியங்கள் நடைபெறுகின்றன."

ஆங்கிலேய அரசுக்கு எதிராக அஹிம்சை முறையில் போரிட்டு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தவராம் காந்தி?! உண்மையை அறிந்து கொள்ளுங்கள் தோழர்களே!

உண்மையான வரலாற்றை மறைத்துவிட்டு,ஏதோ காந்திதாத்தா கடைக்குப் போய் மிட்டாய் வாங்கி வந்த மாதிரி, சுதந்திரம் பெற்ற கதையை,நம்மவர்களுக்கு சொல்லி கொண்டிருக்கிறார்கள்.

அனைவரைம் உண்மையை அறிந்து கொள்ளட்டும்.

"கத்தியின்றி,ரத்தமின்றி நாம் சுதந்திரம் பெற்றோம்" என்பது பொய். எனக்குத் தெரிந்த பொய்களிலெ இதுதான் மிகப்பெரிய பொய்.

எந்த தேசமும் ரத்தம் சிந்தாமல் சுதந்திரம் பெற்றதில்லை.இந்தியாவும் அப்படித்தான் என்பதை எல்லோருக்கும் உரத்துச் சொல்லுகிறேன். இந்திய விடுதலைப் போரில்,புரட்சிகர இயக்கங்களுக்கு மிக அரியதும், நெடியதுமான ஒரு வரலாறு உண்டு. இவ்வியக்கங்களின் 90 ஆண்டுகால வரலாற்றில் மறைக்கப்பட்டுவிட்டது.

ஜாலியன்வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்த ஆங்கில அதிகாரி ஜெனரல் டயரை இந்திய மக்களில் பெரும்பாலோர் அறிவர். ஆனால்,அந்தக் கொடுங்கோலனைப் பழி வாங்குவதற்காக,இங்கிலாந்துக்கே சென்று,21 ஆண்டுகள் தன் வாழ்க்கையின் சுகங்களை எல்லாம் துறந்து,கொண்ட குறிக்கோள் ஒன்றையே மனதில் கொண்டு,தலைமறைவாய் வாழ்ந்து,பின் 1940-ஆம் ஆண்டு தான் நினைத்தையே முடித்தானே உத்தம்சிங். அவனை நம் மக்கள் பலருக்குத் தெரியாது. இப்படி,கொடுங்கோலர்களை அறிந்தவராகவும், நம் தியாகிகளை மறந்தவராகவும் வாழும் அவமானம் நம்மவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. அகிம்சையின் மூலமாக மட்டுமே சுதந்திரம் பெற்றோம் என்ற பொய்யான பிரச்சாரமே, மேற்காணும் இழிநிலைக்குக் காரணம் என்பதை இனியேனும் நம்மவர்கள் உணர்வார்களாக.

மென்பொருள் நிறுவனத்தில் நான்


உலகம் என் கண்ணெதிரிலும், என் கை விரல்களிலும் தெரிகிறது. உலகின் மறு மூலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். சந்திரனையும், செவ்வாயையும் கூட இங்கிருந்தே பார்க்க முடிகிறது. எல்லாம் என் அருகிலேயே இருக்கின்றன. குளிர்சாதனப்பெட்டியின் குளுமையான காற்று, சுத்தமான சூழ்நிலை,அறிவுமிகு மக்கள் உலககோடு தொடர்புகொள்ள இணையம், உறவோடு தொடர்புகொள்ள தொலைபேசி எல்லாம் என் அருகிலேயே.

தேவைக்கும் சற்று அதிகமான ஊதியம். மனம் விரும்புவதையெல்லாம் வாங்குவதற்கு ஒரு வாய்ப்பு. எழில்மிகு கட்டடங்கள் அதில் அழகுமிளிர் பெண்கள். சர்வதேச தரத்திலான வாழ்க்கை. இங்கே விமானம் பயணம் எந்த ஆச்சிரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்துவது கிடையாது. நாடு விட்டு நாடு சென்று பலதரப்பட்ட மக்களுடன் சேர்ந்து பணியாற்றுவது சாதாரண விஷயம். இங்கே கற்றுக்கொள்வதற்கு ஏராளமாக இருக்கிறது. நாளும் ஒரு தொழில் நுட்பம் அறிமுகமாயிக் கொண்டேயிருக்கும் வேலையில் இங்கே எப்பொழுதும் விழிப்புணர்ச்சியுடன் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

சகமனிதர்களின் உதவியில்லாமல் இங்கே நீங்கள் சிறு துரும்பைக்கூட நகர்த்திவிட முடியாது. குழுவுடன் பணியாற்றும் தன்மை மிகவும் அவசியம். தலைமைப் பொறுப்பேற்க இங்கே யாரும் தயங்குவதில்லை. இன்னும் சொல்லப்போனால், அதற்கு இங்கே திறமையானவர்களால் பலத்த போட்டி நிலவுகிறது. திறமை குறைந்தவர்களை இங்கே பார்ப்பது மிக அபூர்வம். அவர்கள் ஆரம்பத்திலேயே அடையாளம் காணப்பட்டு, களைந்தெறியப்பட்டு விடுகின்றனர். எல்லா நடவடிக்கைளிலும், 70 சதவீதத்திற்கு மேல் வெளிப்படையான தன்மையை எதிர்பார்க்கலாம்.

இனம், மொழி, நிறம், நாடு, ஆண், பெண் எவ்வித பாகுபாடும் கிடையாது. எல்லோரும் சமமாக நடத்தப்படுவதோடு தனிநபர் கருத்துக்களும் இங்கே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

மேலும் இங்கே கற்றுக் கொள்வதற்கு யாருமே தயங்குவதில்லை. இன்னும் சொல்லப்போனால், அதிக ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள வருகின்றனர். காரணம், பல சூழ்நிலைகளை, பல விஷயங்களை, கற்றுக்கொண்டால் தான் அடுத்த நிறுவனத்திற்கு செல்லும்போது பயனள்ளதாகவும், வசதியாகவும் இருக்கும் அதிக சம்பளத்தையும் கேட்டும் பெறலாம். இங்கே யாரையும் பேர் சொல்லி அழைக்கும் உரிமையுண்டு. அவர் நிறுவனத்தின் தலைவர் (Company Chairman) ஆக இருந்தாலும் சரி, முதன்மை நிர்வாக அதிகாரி(CEO)-வாக இருந்தாலும் சரி பேர் சொல்லி அழைக்கலாம்.

திறமையான ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள இங்கே அதிக மெனக்கிடக்கிறார்கள். மேலும், ஊதிய உயர்வு என்பது முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையிலேயே தவிர, சாதியின் அடிப்படையில் கிடையாது. இங்கே சாதியின் அடிப்படையில் மக்களை பாகுபடுத்துவதோ, வேற்றுமைபடுத்துவதோ துளியும் கிடையாது. திறமை மட்டுமே அளவுக்கோல், சாதி அல்ல. லஞ்சம், கையூட்டு, கூழ்கும்பிடு போன்ற பேச்சுக்கே இடம் கிடையாது. சிபாரிசு மட்டும் சில பல இடங்களில் பிராந்திய உணர்வு ஆங்காங்கே. இங்கே தொன்றுதொட்டு இருக்கும் ஒரே பிரச்சனை முன்னவர் (Senior) பின்னவர் (Junior) மாமியார், மருமகள் சண்டைப் போல.

அவரவர் வேலைகளில் அவரவர் மிகக் கவனமாகவே இருக்கின்றனர். தகல்களை கையாள்வதில் இங்கே அஜாக்கிரதை என்கிற பேச்சுக்கே இடமிருப்பதில்லை. எத்தகையை இயற்கை சீற்றங்களையும், பாதிப்புகளையும் எதிர்கொள்வதற்கு இவர்கள் எந்நேரத்திலும் தயாராகவே இருக்கின்றனர். அதற்கான வழிமுறைகள், பயிற்சிகள் தவறாமல் அளகிகப்படுகின்றன. இயல், இசை, நாடகம் மூன்றையும் கற்றுக்கொள்வதற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன.

இப்படி எல்லாம் இருந்தும் என் மனதில் ஒரு வெறுமை நிலவுகிறது. பல நூறு மைல்கள் அப்பால் இருக்கும் என் மனதில் சொத்து ஊரைப் பற்றியதான நினைவுகள் அலைப்போல் தாக்கி வருகின்றன.

நான் துள்ளி விளையாடிய அந்த கிராமத்து மண் சாலையை இன்று நான் பார்க்க விரும்புகிறேன். அந்த அரசுப் பள்ளிக்கூட கட்டிடங்கள், உலகை அறிமுகப்படுத்திய நூலகம்,என எல்லாமும் என் கண்முன் நிழலாடுகின்றன. அந்த குதூகலமான கிராமத்து சாலையில் மாலை வேளையில் மிதிவண்டியில் தினமும் 3 கி.மீ பயணம் செய்து திரும்பும் அந்த அற்புதமான, மகிழ்ச்சிப் பயணத்தை வாழ்வில் என்றுமே மறக்க முடியாது. பன்மொழி பேசும் அந்த குட்டி இந்தியா தான் என் உலகத்தின் நிரந்திர சொர்க்கம்.

ஒரு விதமான தனிமையே இங்கே உணர்கிறேன். ஏதோ இழந்து விட்டதைப்போல, தொலைத்துவிட்டதைப்போல .எல்லாமிருந்தும் எதுவுமேயற்றது போலதொரு தனிமை. தனித்து விட்டிருப்பதாக ஒரு எண்ணம், எதை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஒரு கேள்வி? கசைந்து போகுதுமான ஒரு வாழ்க்கை. பொருள் ஈட்ட புறப்பட்டு பொருளற்ற வாழ்க்கையை தொடருவதாக ஒரு குற்ற உணர்ச்சி. இருளில் ஓவியம் தீட்டுவதைப் போல, இதயத்தை விற்று அன்பை வாங்க முயற்சிப்பதா என ஒரு கேள்வி. கால நதியின் கையில் நம்மை ஒப்படைத்தப்பிறகு, அதன் இழுத்த இழப்புக்கு செல்லத்தான் வேண்டும். எதிர் நீச்சல், இங்கே அவ்வளவு எளிமையானதல்ல. அதன் போக்கிலேயே சென்று கரையேறுவதுதான் புத்திசாலித்தனம், சுழலில் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புணர்வுடன் செயல்படுவோமேயானால், வசந்தம் மீண்டும் மலரும் என்ற நம்பிக்கையில் நாட்களை தொடருகிறேன்.

கூகுள் எனும் அரக்கன்


இணைய உலகின் சாம்ராட், முடிசூடா மன்னன் என்று எப்படி வேண்டுமானாலும் கூகுள்-ஐ அழைத்தாலும் தகும். காரணம் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உயர்தர சேவையை எல்லோரும் பயன்படுத்தும் வண்ணம் எளிமையாக வழங்கிவரும் இந்த கூகுள் ஜாம்பவான் இணையத்தில் கால்பதிக்காத துறைகளே இல்லை எனலாம்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் கணினி உலகம் எதை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது, அதன் வளர்ச்சிப்பாதை எதை நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கிறது,அடுத்த 10-ஆண்டுகளில் கணினி உலகம் எதை முழுவதும் சார்ந்து இருக்கும் என்பதையெல்லாம் ஒரு தீர்க்கசரிசனத்துடன் கணக்கிட்டுத்தான் தம் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார். இயங்குதளங்களின் (Operating Systems) ஆட்சிக்காலம் முடிந்தவுடன், இனி கணினி இணையத்தையே நம்பியே இருக்கும் என்று 2000-த்திலேயே தெரிவித்தார். ஆனாலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இணையத்தில் அவ்வளவாக சோபிக்க முடியவில்லை.

இணையத்தின் தொடக்ககாலத்தில் Yahoo நிறுவனம்தான் முன்னணியில் இருந்து வந்தது. அதன் தேடுபொறியைத்தான் (Search Engine) எல்லோருமே பரவலாக பயன்படுத்தி வந்தனர். அதுமட்டுமல்லாது, அதன் இலவச மின்னஞ்சல் சேவை மற்றும் குழு மின்னஞ்சல் (Yahoo Group) சேவை பலரையும் இதன்பால் ஈர்த்துக் கட்டிப்போட்டது. இணையம் என்றாலே Yahoo தான் என்ற காலமும் இருந்தது. ஆம், அதை இறந்தகாலத்தில் தான் கூற வேண்டியுள்ளது. காரணம், தற்போது அந்த இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டிருப்பது சகலகலாவல்லவன், உலகநாயகன் Google தான். வெறும் தேடுபொறியாக அறிமுகமான இந்த Google-ன் சேவைகளை தற்போது பட்டியலிட முடியாத அளவிற்கு முன்னேற்றத்தை கண்டுள்ளது. நாளொரு சேவையும் பொழுதொரு வசதியுமாக மக்களுக்கு அள்ளி வழங்கிக்கொண்டிருக்கும் இந்த Google-ஐ பின் ஏன் அரக்கன் என்று அழைக்கவேண்டும்?

எந்தவொரு துறையிலும் சரியான போட்டி இல்லையெனில் அங்கு ஆரோக்கியமான வளர்ச்சியோ, தரமான பொருட்களோ, சிறந்த வசதிகளோ கிடைக்காது. உதாரணத்திற்கு, வெறும் 10MB, 20MB,100MB என்ற அளவில் மின்னஞ்சல் சேவையினை அளித்துவந்த பல நிறுவனங்களுக்கு மத்தியில் முதன்முதலாக 1GB அளவில் மின்னஞ்சல் வசதியினை அளித்து நம்மை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி மற்ற நிறுவனங்களையும் வழங்கவைத்தது Google தான். பல தேடுபொறிகள் இருந்தாலும் தன்னுடைய துல்லியமான தேடுதல் விவரணங்களை பட்டியலிடுவதினால் இணையத்தில் நிரந்தரமாக முதல் இடத்தை பிடித்திருப்பதும் இந்த Google தான். Google-க்குத் தெரியாத தகவல் இந்த பிரபஞ்சத்திலேயே ஏதாவது இருக்குமா என்பது சந்தேகம் தான். ( பெண்ணின் மனது தெரியாது என்கிறீர்களா? சொல்ல முடியாது. அதுவும் தெரிந்தாலும் தெரிந்திருக்கும். சரியான குறிப்புசொற்களை (Keywords) பயன்படுத்தி தேடிப்பாருங்கள். நிச்சயமாக கிடைக்கும்.)

“மக்கள் தேடும் அல்லது நினைக்கும் அல்லது வேண்டும் அனைத்து விஷயங்களையும் திரைமுன் கொண்டுவருவது தான் எங்கள் நோக்கம். இவை நாடு, மொழி என்று எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் கிடைக்கப்பெற வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இதை நோக்கித்தான் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த 300 ஆண்டுகளில் இதனை சாதித்தே தீருவோம்” என்கிறார் Google-ன் மூத்த அதிகாரி ஒருவர். இந்த இலட்சியமெல்லாம் சிறந்ததுதான். ஆனால், இன்று Google-க்கு நிகரான அல்லது சற்றேறக்குறைய நிகரான நிறுவனங்கள் ஏதாவது இருக்கிறதா? அதனுடன் போட்டியிட்டு அதனைவிட சிறப்பான வசதிகளை தருவதற்கு எந்த நிறுவனமும் தகுதியாக இருக்கிறதா? எதுவுமேயில்லை. இதே நிலை நீடிக்கும் சூழ்நிலையில், நாம் யாவரும் Google-ஐ மட்டுமே முழுவதுமாக நம்பி வாழப் பழகிக்கொண்டுவிட்ட சூழ்நிலையில், நம் தகவல்கள் யாவும் ( மின்னஞ்சல், அரட்டையில் பேசியது, நாட்காட்டியில் பதிந்தவை, பிகாசோவில் பதிவேற்றிய புகைப்படங்கள், வலைப்பூக்களில் எழுதியவை, ஆர்குட்டில் பகிர்ந்து கொண்டவை, யுடியூப்பில் பதிவேற்றிய படங்கள் இப்படி பட்டியல் நீண்டுகொண்டே……………… போகும்) மொத்தமாக Google-ல் மட்டும் இருந்துவரும் சூழ்நிலையில் சரியான போட்டியில்லாத காரணத்தால் Google-ன் ஏகாதிபத்தியும் துளிர்விடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டுவதற்கே அரக்கன் என்று குறிப்பிடுகிறேன்.

தொடக்க காலத்தில் இலவசங்களை அள்ளி வீசி (மூ.க-வைப்போல) மக்களை தம்பக்கம் ஈர்த்துக்கொள்வதின் மூலம் ஏற்கனவே தொழில் செய்து வருபவர்களை மெல்ல மெல்ல ஒடுக்குவது பின் ஒரு கட்டத்தில் போட்டியே இல்லாத சூழ்நிலையில், தான் வைத்ததுதான் சட்டம் என்கிற தோரணையில் சர்வதிகார நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது. இதுதான் வரலாறு சந்தித்து வந்துள்ள சம்பவங்கள்/அனுபவங்கள். இதனைத்தான் Google-ம் செய்யவிருகிறதோ என்கிற அச்சஉணர்வு தான் அதனை அரக்கன் என்று அழைக்கத் தூண்டுகிறது.

நாம் தகவல்களுக்காக முழுக்க முழுக்க Google-ஐ மட்டுமே நம்பிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், Google உலகையே விலை பேசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆம், இது உறுதி. ஆனால், இது ஏதோ இன்றோ நாளையோ நடைபெற்றுவிடுமென்று நான் கூற முன்வரவில்லை. அடுத்த 300 ஆண்டுகளுக்கு அடுத்து நான் குறிப்பிட்ட “உலகை விலைபேசும் சூழல் வரலாம்”. மறுக்க முடியுமா? வியக்க வைக்கும் அதன் வளர்ச்சியையும் தரமான சேவையையும் முற்றிலும் இலவசமாக வழங்கும் மாண்பினையும் மிஞ்சும் அளவுக்கு எந்தவொரு நிறுவனமும் இல்லை என்பதை மறந்துவிடக் கூடாது. ஆரோக்கியமான வளர்ச்சிக்கு போட்டி மிக அவசியம். அந்த விஷயத்தில் தற்போது உடனடித் தேவை Google-க்கு சரிநிகரான போட்டிதான். அதுவே நம் எல்லோரையும் பாதுகாக்கும்.

நன்றி : தமிழ் கபே 

காந்தி செய்த துரோகம்

பகத்சிங் பற்றி நான் படித்த புத்தகமொன்றின் நினைவுக்குறிப்பேட்டிலிருந்து...
ஒரு ரசிகனின் மனோபாவத்தோடும்,ஒரு பக்தனின் நம்பிக்கையோடும் புனையப்பட்ட வரலாறுகள் நம்முன்னே குவிந்து கொண்டிருக்கும் நேரத்தில் இதோ,ஓர் ஆராய்ச்சியாளனின் சிரத்தையோடும் நேர்மையோடும் அளிக்கப்படும் வரலாற்று சான்றுகள். தனது வாழ்நாள் முழுவதும் தேச மக்களுக்கும், புரட்சிகர இயக்கங்களுக்கும் காங்கிரசும், காந்தியும் செய்த துரோகங்கள் கொஞ்சமல்ல.இந்த காந்தியையே 'மகாத்மா' என்றும் 'தேசத்தந்தை' என்றும் இந்தியப் பூர்ஷுவாக்கள் நம் தோளிலே தூக்கி வைக்கிறார்கள்.

1885-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் நாள், பம்பாய் நகரத்தில், கோகுல்தாஸ் தாஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியில், வங்கத்தைச் சேர்ந்த உமேஷ் சந்திர பானார்ஜியின் தலைமையில், இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் முதல் மாநாடு நடந்தது. 'காங்கிரஸின் தந்தை' எனப்பெயர் பெற்ற ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்னும் ஆங்கிலேய அதிகாரி தான் காங்கிரஸ் கட்சியை உருவாக்கியவர். "படிப்பறிவு கொண்ட பிரிட்டிஷ் விசுவாசிகளை" அரசாங்கத்துக்கு ஆதரவாக ஒன்று திரட்டுவதே காங்கிரஸை உருவாக்குவதே அவருடைய நோக்கமாக இருந்தது. அவரே, தொடர்ந்து 20 வருடங்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். அவரது எண்ணத்திற்கேற்பவே, காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் மிகுந்த 'ராஜ விசுவாசம்' உடையவர்களாக விளங்கினர்.1886-ஆம் ஆண்டு கல்கத்தாவில்( இன்றைய கோல்கத்தாவில்) நடைப்பெற்ற 2-வது காங்கிரஸ் மாநாட்டின் முதல் தீர்மானத்தை அதற்கு ஒரு எடுத்துக் காட்டாக நாம் கொள்ளலாம். அத்தீர்மானவது:-

"மஹாராணியின் அனுகூலமான என்றும் மறப்பர்கரிய, கீர்த்திமிக்க ஆட்சியில் 50 வருஷம் முடிவுபெற்றதைக் குறித்துச் சக்கவர்த்தினியிடம் கடமைப்படி உண்மையான மகிழ்ச்சிகள் தெரிவிப்பதுடன், பாரததேசத்தின் எல்லாப் பகுதிகளினிறும் பிரதிநிதிகள் வந்து கூடிய இந்த ஜனசபை பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் மீது அம்மகாராணி இன்னும் பல பல வருஷம் ஆள வேண்டுமென்று வாழ்த்துகிறது."

மஹாராணியார் பல பல வருஷம் வாழவேண்டுமெண்று கூட இல்லை,பல பல வருஷம் நம்மை ஆள வேண்டுமென்றே நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், ஆங்கிலேயர்களை வெகுவாக மகிழ்வித்து இருக்கும். ஆக, இந்திய விடுதலையை மனதில் கொண்டு, உருவாக்கப்பட்ட இயக்கமன்று காங்கிரஸ் கட்சி என்பது தெளிவாகிறது. கலப்படமற்ற ராஜவிசுவாசத்திலிருந்து, தங்களின் தேச மக்கள் தேவைகளுக்காக அரசாங்கத்திடம் மனுப்போடும் அடுத்த கட்டத்திற்கு காங்கிரஸ் வந்தது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வலதுசாரித் தீவரவாதி தலைவர்களான திலகர், வ.உ.சி.,அரவிந்தர் முதலானோரால், காங்கிரஸ் கட்சியில் புதிய ஒளி கூடியது. 1917 -ஆம் ஆண்டு சம்ப்ரான் சத்தியாகிரகத்திற்குப் பிறகு, காந்தியின் தலைமையில்,அரசாங்கத்திற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம், வரிகொடா இயக்கம் முதலான போராட்டங்கள் நடைப்பெற்றன.
இறுதியாக 1942-ல் "வெள்ளையனே வெளியேறு" என்ற முழக்கத்தோடு தொடங்கிய கடைசிப் போரில், காங்கிரஸ் தொண்டர்கள் பலரும், அஹிம்சையில் நம்பிக்கையிழந்து, காந்தியின் பிடியிலிருந்து நழுவி, வன்முறைச் செயல்களில் இறங்கினர். இவ்வாறு இந்திய மக்கள் புரட்சிகர நடவடிக்கைகளில் நாட்டம் கொள்ளத் தொடங்கியுள்ளமையை நன்கு அறிந்து கொண்டதாலும், இரண்டாம் உலகப்போரில் தனக்கேற்ப்பட்ட பொருளாதார நெருக்கடிகளினாலும், இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்க வேண்டிய கட்டாயத்திற்குப் பிரிட்டிஷ் அரசாங்கம் தள்ளப்பட்டது.1947 ல் இந்தியாவிற்கு அரசியல் விடுதலை கிடைத்தது. மேற்காணும், சுருக்கமான காங்கிரஸ் வரலாற்றில் எவ்வாறு இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது என்பதை மட்டும் தெளிவாக அறிந்துகொள்ள இயலுகிறது.

புரட்சிகர இளைஞர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக அறிக்கை விடுவதிலும், காங்கிரஸ் மாநாடுகளில் அவர்களைக் கண்டிக்கும் தீர்மானங்களை முன்மொழிவதிலும் மட்டுமே காந்தியார் மிகக் கவனமாக இருந்தார், எங்கே மக்களுக்கு உண்மை தெரிந்துவிடுமோயென்று! பகத்சிங்கைத் தூக்கிலிடத் தூண்டியதும், அதற்குத் தேதி குறித்ததும் காந்தியே என்பது, காந்தி-இர்வின் சந்திப்புகள், ஒப்பந்தங்கள், கடிதங்கள் மூலம் இங்கே நிருபிக்கப்பட உள்ளது.

தளர்ந்த போன காந்தியின் அஹிம்சை பற்றியும்,புரட்சி இயக்கத்தின் தேவை பற்றியும் சசிந்திரநாத் சன்யால் (இவர்,முதல் உலகப் போருக்கு முன்பாகவே புரட்சி நடவடிக்கைகளில் பங்கு கொண்டவர்:ராஷ் பிகாரி கோஷின் வலக்காரமாக விளங்கியவர்.) காந்தியாருக்கு எழுதிய கடிதம் வரலாற்றுப் புகழ்மிக்கது.அக்கடிதத்தின் முக்கியத்துவம் கருதி, சில பகுதிகள், கீழே தரப்படுகின்றன உங்களுக்காக.

"தங்களது சோதனைக்கு ஓர் ஆண்டு தேவை என்றீர்கள்.ஆனால் நான்கு முழு ஆண்டுகளுக்குத் தங்களது சோதனை நீண்டது.போதுமான அளவுக்கு முயன்று பார்க்கப்படவில்லை என்று தாங்கள் இன்னுமா சாதிக்க முயல்கிறீர்கள்? உண்மையில் தங்கள் திட்டம் தோற்றுத் தான் போய்விட்டது.ஆனால் அது இந்திய மக்களால் நேர்ந்ததன்று".

"தங்களிடம் தொலை நோக்கு என்பதே கிடையாது.ஒரு பலவீனமான வழக்குக்கு தாங்கள் வக்காலத்து வாங்குகிறீர்கள்". "நீங்கள் புரட்சியாளர்களை இரக்கமற்ற முறையில் விமர்சிக்கிறீர்கள்". உங்கள் கொள்கைகளிருந்தும், வழிமுறைகளிருந்தும் மாறுபட்டமைக்காக அவர்களைத் 'தேசத்தின் எதிரிகள்' என்று சொல்லும் அளவுக்குப் போயிருக்கிறீர்கள். புரட்சியாளர்கள் தங்கள் தாயகத்திற்காக அனைத்தையும் இழந்தவர்கள் .அவர்களுக்கு உங்களால் உதவமுடியாவிட்டாலும், குறைந்தது அவர்களிடம் கொடுமையைக் காட்டமலாவது இருங்களேன்".

இக்கடிதம் பல இளைஞர்களின் உணர்ச்சிகளையும், மனத்தாங்கலையும் பிரதிபலித்தது என்றே கூறவேண்டும். உண்மையும் அதுதான்.

காந்தியின் செல்வாக்கு,ஆங்கிலேயர்களை அடக்குவதைக் காட்டிலும், புரட்சியாளர்களின் வீரியத்தைக் குறைக்கவே மிகுதியும் பயன்பட்டது.

அஹிம்சை வழியில் போராடினால், 1921-ஆம் ஆண்டிற்குள் இந்தியா சுதந்திரமடைந்துவிடும் (India would be free by the midnight of December 31,1921) என்ற காந்தியின் வாக்கு பொய்த்துப் போனபின், 1922-ல் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி, இந்த மண்ணின் இளைஞர்களுக்கு புரட்சிகர நடவடிக்கைகளில் ஓர் ஆர்வத்தைத் தூண்டிவிட்டது.

புதிதாகப் புறப்பட்ட இந்தப் புயலில் இருந்துதான் பல நூற்றுக்கணக்கான புரட்சியாளர்கள் புறப்பட்டுவந்தனர். இவர்களை உருவாக்கிய அந்தப் புயல்,உத்திரபிர்தேசம், கோரக்பூர் மாவட்டத்தில், சௌரி சௌரா என்னுமிடத்தில் மையம் கொண்டிருந்தது.

பலரைச் சுட்டுக் கொன்றும், மிகப்பலரை அடித்து வீழ்த்தியும், காயப்படுத்தியும் வெறியாட்டம் நடத்திய சௌரி சௌரா போலிசாரின் அட்டூழியங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத மக்கள்,குனிந்த தலை நிமிர்ந்தனர். உயிருக்குப் பயந்து ஓடிய 21 போலிசாரையும், காவல் நிலையத்திற்குள் வைத்து உயிரோடு கொளுத்திவிட்டனர்.

செய்தியறிந்த காந்தியார்,நாடு முழுவதும் நடந்து கொண்டிருந்த ஒத்துழையாமை இயக்கத்தை உடனே நிறுத்தும்படி உத்தரவிட்டார். யாரையும் கலந்தாலோசிக்கவில்லை. தான் இமாலயத் தவறு செய்துவிட்டதாக அறிக்கை விட்டார்.முடிவைக் காட்டிலும்,முறையே முக்கியமானது (Means not end) என்று தான் கருதுவதால், எக்காரணம் கொண்டும், எந்த நியாத்திற்காகவும், தன்னால் ஹிம்சையை ஆதரிக்க முடியாது என்று கூறினார்.

ஆனால், இதே காந்தியார்,முதல் உலகப்போரில், பென்லாண்ட் பிரபு,வெலிங்டன் பிரபு, ஜேம்ஸ் மெஸ்டன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்குக் கூடத் தன்னாலியன்றவைகளைச் செய்துள்ளார் என்பது நாமறிந்த வரலாறேயாகும். வெள்ளைக்காரக் கவர்னர்களின் பேச்சை ஏற்றுக் கொண்டு,உலகப்போரில் தன்னையும், நாட்டு மக்களையும் பிணைத்துக் கொண்டது மட்டும் எவ்வாறு அஹிம்சையாகும்? போர் என்றாலே ஹிம்சைதான் என்று காந்தியாருக்குத் தெரியாத என்ன?
 
காந்தி-இர்வின் ஒப்பந்தத்தால் விளைந்த மற்றெந்தக் கேட்டினையும் விட மிகப்பெரியது, பகத்சிங்கும் அவர் தோழர்களும் தூக்கிலிடப்பட்ட சம்பவமே ஆகும். ஆம். இவ்வொப்பந்தத்திற்கும், பகத்சிங்கின் மரண தண்டனைக்கும் நேரிடையாகவே தொடர்பிருந்தமை இங்கு தெளிவுபடுத்தப்பட உள்ளது. சிறைச்சாலைக்குள் இருந்த மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு,சி.ஆர். தாஸ் முதலான காங்கிரசு தலைவர்களே கூட, காந்தியாரின் இச்செய்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. நேரு அவர்கள், சிறையிலிருந்தபடியே ஓர் அறிக்கை வெளியிட்டார்:-
"இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் உள்ள ஏதோ ஒரு கிராமத்தில்,மக்கள் அடக்குமுறை தாளாமல், பலாத்காரத்தை உபயோகித்துவிட்டார்கள் என்பதற்காக, இந்திய சுதந்திரப் போரையே ஒத்தி வைப்பதா? ஆம் என்றால், காந்திஜி கூறும் அஹிம்சைக் கொள்கைகளில், எங்கோ ஒரு பெரிய கோளாறு இருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது".................................................................

இந்தியா முழுவதும் ,எந்த ஒரு இடத்திலும், வன்முறைச் சம்பவமே நடக்காது என்று உத்தரவாதம் ஏற்பட்டால்தான் இயக்கத்தைத் தொடர முடியும் என்று காந்திஜி கருதுவாரானால், அவரது இயக்கமும் சரி, அஹிம்சைப் போராட்டமும் சரி,ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வெற்றிபெறப் போவதில்லை. ஒரு அடிமை நாட்டு மக்களிடமிருந்து, அடக்கப்பட்ட,ஒடிக்கப்பட்ட மக்களிடமிருந்து, அப்படிப்பட்ட உத்தரவாதத்தைப் பெற எவராலும் முடியாது".

நேருவின் இந்த அறிக்கை, அனைத்து காங்கிரஸ் கட்சி தலைவர்களின் கருத்தாக இருந்தது. 

நன்றி : தமிழ் கபே