Wednesday, July 7, 2010

India is back on a high growth trajectory


India has set an ambitious target of making 2012 the year of double digit growth even as it grapples with the twin problems of mounting deficit and rising inflation.

“India is back on a high growth trajectory,” Finance Minister Pranab Mukherjee said in a presentation here Monday to the Institute of International Finance, a global association created by 38 banks of leading industrialised countries in 1983 in response to the international debt crisis of the early 1980s.

Mr. Mukherjee is here to lead a high-powered team of policymakers including Commerce Minister Anand Sharma and Planning Commission Deputy Chairman Montek Singh Ahluwalia at the India-U.S. CEOs Forum Tuesday.

He will also have a separate bilateral meeting with US Treasury Secretary Timothy Geithner Tuesday.

Noting that India had not remained unaffected by the global financial crisis, Mukherjee said after four consecutive years of 9 percent plus growth, the Indian economy had slowed down to 6.7 percent in fiscal 2008-09.

But it had bounced back to 7.4 percent growth in 2009-10 and was expected to register 8.5 percent in 2010-11, he said for once agreeing with the International Monetary Fund prediction of 8.8 percent growth.

As two thirds of Indian exports went to developing countries, the Finance Minister said he had to concentrate on generating domestic demand to put the country back on the growth road after the global recession that hit advanced economies hard.

While India is expected to register a growth of 9 percent in 2011-12, “My target is to make it a year of double digit growth,” he said.

With the world back on the road to recovery thanks to stimulus and other measures agreed to by the group of 20 leading economies, the question was at what point of time should there be a total exit policy, Mr. Mukherjee said.

His prescription made to the G-20 finance ministers ahead of this week’s Toronto summit was that all countries will not take fiscal consolidation at a time and this should be staggered, the minister said.

India had to start the fiscal consolidation as fiscal deficit had risen from 3 percent to 6.8 percent in 2008-09, he said describing inflation as the second major challenge before the country.

Noting that India would require a huge investment of about $600 billion in the next few years in the infrastructure sector, Mr. Mukherjee said the inflow of foreign direct investment had not been disturbed despite the financial crisis.

“Confidence in the Indian economy and its potential is well recognised and our private sector is very vibrant and dynamic,” he said noting that the younger generation of the business leadership had no baggage of the past. “They have emerged as the global citizens and global players.”

இன்னமும் பாழாய்ப் போன கடவுள் இருக்கிறார் என்று கருதுகின்றீர்களா ?

மூடர்களே! மூடர்களே!! ஒரு சின்ன சங்கதி. கோவிலின் மீதிருக்கும் கலசம் திருட்டுப் போகின்றது. அம்மன் விக்ரகங்களின் கழுத்திலிருக்கும் தாலிகள் திருட்டுப் போகின்றன. விஷ்ணு விக்ரகத்தின் நெற்றியிலிருக்கும் நடுநாமம் (தங்கத்தில் வைத்தது) திருட்டுப் போகின்றது. சிவன் விக்ரத்திலிருக்கும் நெற்றிப்பட்டை மற்ற விக்ரகங்களைக் கீழே தள்ளி அதிலிருக்கும் தங்கம், முத்து, ரத்தினம் திருட்டுப் போகின்றது. இவைகளின் வாகனத்தின் தேரில் நெருப்பு பிடிக்கின்றது. அச்சு ஒடிகின்றது. இவைகளின் பயனாய் பலர் சாகின்றனர். மூடர்களே, இவற்றைப் பார்த்தும் கேட்டும் கூடவா அந்த இடங்களில், அந்த விக்ரகங்களில், அந்த தேர்வாகனங்களின் புனிதத்தன்மை, தெய்வத்தன்மை, அருள்தன்மை, ஆண்டவனை ஞாபகப்படுத்தும் தன்மை முதலியவைகள் இருக்கின்றதாக நினைக்கின்றீர்களா? உங்களிலும் மூடர்கள் இனியும் எங்காகிலும் உண்டா? தயவு செய்து சொல்லுங்கள்.
இன்னும் ஒரே ஒரு குட்டி சங்கதி. வட்டி வாங்குகிறவன்கள் கோடீசுவரனாகிறான். வட்டி கொடுப்பவன் நாசமாய் பாப்ராய் போகிறான் என்பதைப் பார்த்தும், கேட்டும் இன்னமும் பாழாய்ப் போன கடவுள் இருக்கிறார் என்று கருதுகின்றீர்களா? இன்னும் ஒன்றுதான். அப்புறம் ஒன்றுமில்லை. துளியுண்டு சங்கதி... காவடி எடுத்துக் கொண்டு போனவன் காலராவில் செத்தபிறகு கூடவா நாசமாய்ப் போன சாமி இருக்குதுன்னு நினைக்கின்றீர்கள். . .
மூடர்: சும்மா இப்படியெல்லாம் பேசிவிட்டால் போதுமா? இந்த உலகத்தைப் படைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டாமோ? அதுதான், கடவுள்.
பதில்: சரி, அப்படியானால் அந்தக் காரணத்தை கடவுளை உண்டாக்கினதற்கு மற்றொரு காரணம் வேண்டாமா? அதுதான் சுயமரியாதை இயக்கம் (பகுத்தறிவு).
மூடர்: கடவுளைப் படைப்பதற்கு ஒரு காரணம் கேட்பது, முட்டாள்தனமாகும்.
பதில்: அப்படியானால், உலகப் படைப்புக்குக் காரணம் தேடிக் கொண்டிருப்பது அதைவிட இரட்டிப்பு முட்டாள்தனமாகும்.
மூடர்: உங்களோடு யார் பேசுவார்கள்?
பதில்: சரி நல்ல காரியமாச்சு, சனியன் தொலைந்தது. ஆனால் காணாத இடத்தில் குலைக்காதே.
-------- சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதியது
(”குடிஅரசு”, கற்பனை உரையாடல், 04-01-1931)

கவிதைகள்

பழைய மனிதன்
எல்லா இடங்களிலும்
ஏதோ ஒரு பைத்தியம்
கழுத்து பிளாஸ்டிக் மணியைத்
தொட்டுக்காட்டி
சிதைவுண்டு போன பற்களை
வெளிப்படுத்தி
அதிர்ச்சியூட்டும் சிரிப்புடன்
காசு வாங்கிச் செல்கிறது
தன்னைக் கண்டு பயப்படும்
மனிதனைக் கண்டு அருவருக்கும்
பைத்தியத்தின் உடலில் முன்பு
மனிதனாயிருந்த தன்
அடையாளங்கள்
நிறையவே உள்ளன.
உயிர்
நான்கு நாட்களாக
கிழிபடாமலிருக்கும்
நாட்காட்டியில் தொடங்கி
அறைக்கதவின் உட்பக்கத் தாழ்
தொட்டு
சுழலாத மின்விசிறியின்
உச்சிக்குச் சென்று
இறுகித் தொங்கும் நைலான் கயிற்றின்
வழி கீழிறங்கி படரும்
தன் வாழ்விடத்தின் வாசலை
பின்னத் தொடங்குகிறது
அச்சிலந்தி
பிதுங்கிய அவ்விழிகளின்மீது.

புத்தரும் வள்ளுவரும் மடமையை ஒழித்த இரு பெரியார்கள்

தந்தை பெரியாரின் புகழ் பெற்ற சொற்பொழிவுகள் 
பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! இந்தக் கூட்டம் ஓர் ஆண்டு விழாவுக்காக கூட்டப்பட்டதாகும் அதுவும் வள்ளுவர் படிப்பக ஆண்டுவிழா. இதற்கு அழைக்கப்பட்டு இருப்பதினால் வள்ளுவரைப்பற்றி ஏதோ சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன். பிறகு பொதுவிஷயங்கள் பற்றிய பேசுகின்றேன்.
நண்பர் வீரமணி அவர்கள் சொன்னதுபோல, முதலாவதாக நாம் சிந்திக்கவேண்டிய விஷயம் உலகத்திலேயே நாம் மட்டும்தான் காட்டுமிராண்டிகளாக இருந்து வருகின்றோம். இந்த நாட்டில் குடிபுகுந்த பார்ப்பான் எப்படியோ மக்களை மடையர்களாகவும், காட்டு மிராண்டிகளாகவும் ஆக்கிவிட்டார்கள். இவைகளை ஒழித்து மக்கள் சமுதாயத்தை விழிப்புறச் செய்ய நாட்டில் எவருமே தோன்றவில்லை. தோன்றியவர்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டு இருக்கின்றனர்.
முன்காலத்தில் நமது அரசர்கள் எனப்படும் இரண்யன், சூரபத்மன், இராவணன் முதலானவர்கள் முயற்சி செய்து இருக்கின்றனர். இவர்கள் எல்லாம் தந்திரமாகவே ஒழிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இப்படி பார்ப்பனர்களின் வண்டவாளங்களையும், பித்தலாட்டங்களையும் கண்டித்து மக்களுக்கு அறிவுக்கண் திறக்கும்படி பாடுபட்டவர்களில் இரண்டு பேர்களை நாம் தெளிவாக உணர வாய்ப்பு உள்ளது.
2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் என்பவர் தோன்றி, பார்ப்பான் கற்பித்த கடவுள் மோட்சம், நரகம் முதலிய பித்தலாட்டங்களை எல்லாம் கண்டித்து மக்களுக்கு பகுத்தறிவு உணர்ச்சி உண்டாக்கப் பாடுபட்டார். இப்படிப் பாடுபட்ட அவரும், அவரது மார்க்கமும் பார்ப்பனர்களால் தந்திரமாக ஒழிக்கப்பட்டுவிட்டது.
அடுத்து வள்ளுவர் தோன்றினார். அறிவு சம்பந்தமான கருத்துகளை எல்லாம் குறளாகப் பாடினார். இவரது குறளும் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாமல் குப்பையில் தள்ளப்பட்டுக் கிடக்கும் வண்ணம் செய்துவிட்டார்கள். இந்த நாட்டில் இராமாயணத்திற்கும், கதைக்கும் இருக்கின்ற பெருமை இப்படிப்பட்ட அறிவு சம்பந்தமான குறளுக்கு நாட்டில் மதிப்பு இல்லை. இந்த புராணக் கதைகளை மக்கள் தெரிந்து இருக்கும் அளவு குறளை தெரிந்து இருக்கமாட்டார்கள்.
இவர்களுக்குப் பிறகு எவருமே தோன்றவே இல்லை; தோன்றிய ஆழ்வார்கள், நாயன்மார்கள், அவதாரப் புருஷர்கள் என்பவர்கள் எல்லாம் நம்மை என்றென்றைக்கும் மடையர்களாகவும், பார்ப்பானுடைய கடவுளுக்கு அடிமையாகவும் ஆக்கவே பாடுபட்டார்கள். அதன் காரணமாகவே, பார்ப்பானால் ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று சுத்த அடிமுட்டாள்கள், காலிகள் எல்லாம் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளனர்.
அடுத்து, ஏதோ சித்தர்கள் என்று பல பேர்கள் இருந்து இருக்கின்றார்கள். இவர்களும் சந்திலே பொந்திலே இருந்து கொண்டு ஏதோ இரண்டொரு வார்த்தைகள் கூறி இருப்பார்கள். மற்றபடி எவனும் வெளிவந்து எவனும் பாடுபட முன்வரவே இல்லை. நாங்கள்தான் பாடுபடுகின்றோம்.
மற்றபடி எந்த அரசியல் கட்சிக்காரர்களும் இதில் ஈடுபடமாட்டார்கள். எங்களைவிட படித்தவர்கள், புலவர்கள் மேதாவிகள் ஆக இருக்கலாம். இவர்கள் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குப் படித்தவர்கள் ஆவார்கள். அரசியல் கட்சிக்காரர்கள் சொன்னால் ஓட்டுக் கிடைக்காதே என்று கூறமாட்டார்கள்.
தோழர்களே! நான் முன்பு குறிப்பிட்டதுபோல புத்தரும், வள்ளுவரும்தான் இப்படி பார்ப்பனர்களை எதிர்த்து அறிவுப் பிரச்சாரம் செய்து இருக்கின்றனர்.
பவுத்தர்கள் எல்லாம் புத்தரையும் புத்த மார்க்கத்தையும், தெய்வத்தன்மை பொருந்தியவர், அவர் கோட்பாடுகள் எல்லாம் முடிந்த முடிவானது என்று எண்ணுவதோடு, மூடத்தனமான சடங்குகளை எல்லாம் அறியாமையின் காரணமாக கையாண்டு வருகின்றனர்.
நான் புத்தனையோ, வள்ளுவனையோ, முகமது நபியையோ மனிதத்தன்மைக்கு மேம்பட்டவர்கள் என்பதை ஒத்துக்கொள்ளுவதில்லை. இவர்கள் மனிதத்தன்மைக்கு மேம்பட்டவர்கள் என்றால், அவர்கள் அதிசயமானவர்கள் என்று கருதி மரியாதை செலுத்தவேண்டிய அவசியம் இல்லை. மனிதன் என்று கருதினால்தான் அவர்களுக்கு மதிப்பு உண்டு.
எவன் ஒருவன் அறிவை சுதந்தரமாக விட்டு எந்தக் காரியத்தையும் சிந்திக்கின்றானோ, அவன் எல்லாம் புத்தன் அவன் எல்லாம் வள்ளுவன் இராமசாமி இப்படி ஆகலாம், புத்தன் என்றாலேயே புத்தி உடையவன், புத்தியைக் கொண்டு எதையும் ஆராய்பவன் என்பதன் பொருள்.
இந்தக் கருத்தை ஈரோட்டில் நடைபெற்ற புத்த மாநாட்டில் எடுத்துச் சொன்னேன். உலக புத்த சங்கத் தலைவரான திரு. மல்லல சேகராவும் இதனை ஒத்துக் கொண்டார். நேற்று கோலார் புத்த சங்க ஆண்டு விழாவிலும் கூறினேன். அவர்களும் ஒத்துக்கொண்டார்கள்.
புத்தர் வள்ளுவர் இவர்கள் கருத்துகளே முடிந்த முடிவு. இவைகள் எந்த காலத்துக்கும் பொருந்தும் என்று கூறமுடியாது. புத்தர், வள்ளுவர் ஆகியவர்கள் வாழ்ந்த காலம் அன்றைய மக்கள் நிலை முதலியவைகளையும் எண்ணிப் பார்க்கவேண்டும். புத்தர் 2500 ஆண்டுக்கு முன்னும், வள்ளுவர் 2000 ஆண்டுக்கு முன்னும் வாழ்ந்தவர்கள். அன்றையதினம் இருந்த கேடுகளுக்குப் பரிகாரமாகவும், அன்றைய அனுபவத்தை ஒட்டியும் எடுத்துச்சொல்லி இருக்கின்றார்கள். அன்றைய ஆசிரியர்களின் வைதீக மார்க்கத்தைக் கண்டித்து உள்ளார்கள். இன்றைய நிலையிலும் ஆரியர் ஆதிக்கம் இருக்கின்றது. இந்தக் கருத்துகளை நாம் பாராட்ட வேண்டியதுதான்.
சிக்கி - முக்கிக்கல் காலத்து மனிதனுக்கு இன்றைய மின்சார விளக்கைப்பற்றி தெரிந்து இருக்கமுடியுமா? மனிதன் பழைய சங்கதி என்றாலே ஜாக்கிரதையாக சிந்திக்கவேண்டும். அப்படியே ஏற்றுக்கொள்ளுவது ஒருவகைப் பார்ப்பனியம்தான். மூடநம்பிக்கையானது தான் எதையும் யார் சொன்னதாக இருந்தபோதிலும், எந்த காலத்தில் கூறப்பட்டு இருந்தபோதிலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், உன் அறிவு கொண்டு சிந்திக்கவேண்டும். இப்படித்தான் புத்தரும், வள்ளுவருமே கூறியும் உள்ளார்கள்.
இராமாயணமும், பாரதமும் கி.மு.200, 300 இல் எழுந்திருக்க வேண்டும். இராமாயணம் முந்தியது, பாரதம் பிந்தியதாகும். இப்படி 2000 ஆண்டுக்கு முன் மக்கள் அறிவு என்ன இருந்து இருக்க முடியும்? சிக்கிமுக்கிக்கல் காலத்தவர்கள் ஆயிற்றே, அந்தக் காலத்து மனிதன் மூளையில் எழுந்த கருத்து இன்றைக்கு எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும்? இவைகள் எப்படி பின்பற்றத்தகுந்ததாக இருக்க முடியும்? இவைகள் இருக்கத் தகுந்தது, போற்றத் தகுந்தது என்று எவனாவது சொல்லுவானேயானால் இதில் கண்ட போற்றத்தகுந்த கொள்கைப்படி நடக்கத் தயாராக இருக்கின்றானா? பாரதத்தில் ஒருவன்கூட அவன் அப்பனுக்குப் பிறக்கவில்லை. இப்படி இருக்க எவனாவது ஒத்துக்கொள்ளுவானா? பாரதத்தில் திரவுபதிக்கு 5 புருஷன். இன்றைக்கு அது இருக்கவேண்டும்.
போற்றவேண்டியது என்பவன் எவனாவது தங்கள் மனைவி மகளை 5 பேரைக் கட்டிக் கொள்ள சம்மதிப்பவன்? இதனை ஒத்துகொள்ள-மாட்டான். ஆனால், அந்த கதையை மட்டும் கொண்டாடுகின்றானே என்ன நியாயம்?
தோழர்களே! இராமாயணத்தில் தசரதன் தன் தங்கையையே கட்டிக் கொண்டு இருக்கின்றான். வால்மீகி மாற்றிவிட்டான். ஆனால், புத்த இராமாயணம், சமண இராமாயணம் முதலியவைகளைப் பார்த்தால் தெரியும். தசரதனும், கோசலநாட்டு அரசன். கவுசலையும் கோசலநாட்டு அரசன் மகள். அதன் காரணமாகவே கவுசலை அல்லது கோசலை என்று அழைக்கப்பட்டாள். சுமார் 70 வருஷம் முன்வரையில் சயாமில் இந்தமுறை அரச குடும்பத்தில் இருந்து வந்து இருக்கின்றது. நமது கடவுள்கள் என்பவைகளும்கூட தங்கச்சியையும், மகளையும் கட்டிக்கொண்டதாக புராணங்களில் காண்கின்றோம்.
இராமன், அவன் அப்பன் தசரதனுக்குப் பிறந்தவன் அல்ல; யாகப் புரோகிதனுக்குப் பிறந்தவன். அந்த காலங்களில் அது குற்றமாகக் கருதப்படவில்லை. புத்திரகா மேஷ்டி யாகம் என்றால், யாகப் புரோகிதனுடன் பிள்ளை இல்லாவிட்டால் கலவி செய்து குழந்தை பெற்றுக் கொள்ளுவது என்பது தான் பொருள்.
ஏன் இதனை எடுத்துச் சொல்லுகின்றேன் என்றால், அன்றை மக்கள் அறிவு நடப்பு இவ்வளவுதான். அது இன்றைக்கும் எப்படிப் பொருந்தும்? என்பதை எடுத்துக்காட்டவேயாகும். நம் கதைகளிலும், புராணங்களிலும் ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் என்று ஆரம்பிக்கும். இன்று அரசன், இந்த நாட்டில் எங்கே இருக்கிறான்? உலகத்தில் பெரும்பாகங்களில் இராஜாக்கள் எல்லாம் தூக்கி எறியப்பட்டுவிடவில்லையா? எனவே, எதையும் முன்னோர் சொன்னது, செய்தது, பழையவழக்கம் என்பதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அறிவுகொண்டு ஜாக்கிரதையாக சிந்திக்க-வேண்டும். இராமாயணத்தில் கூறுகின்றான். எவன் ஒருவன் கடவுள், மதம் முதலியவைகளையும், முன்னோர்கள் நடப்புகளையும் அறிவு கொண்டு சிந்திக்கின்றானோ அவன் எல்லாம் நாத்திகன் என்று கூறப்பட்டு உள்ளது. இன்னொரு இடத்தில் எவன் ஒருவன் அறிவு கொண்டு நீதி பேசுகின்றானோ அவன் நாத்திகன் என்று கூறியுள்ளது. இப்படியாக அறிவை உபயோகப்படுத்தியவர்கள் எல்லாம் நாத்திகர்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டு விட்டார்கள். அறிவு கொண்டு சிந்திக்காத காரணத்தினாலேயே, நாம் இந்த 20ஆம் நூற்றாண்டிலும் இழிமக்களாகவும், காட்டுமிராண்டி மக்களாகவும் இருக்கின்றோம் விஞ்ஞான அறிவு பெற்ற மேல்நாட்டுக்காரன் எவனாவது நம்மை மனிதன் என்று ஏற்றுக்கொள்ளுவானா? என்று குறிப்பிட்டார்கள்.
மேலும் பேசுகையில் கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரங்கள் ஒழிக்க வேண்டிய அவசியம் பற்றியும், அரசியல் பித்தலாட்டக்காரர்களின் தன்மைகள் பற்றியும் தெளிவுபடுத்தி அறிவுரையாற்றினார்கள்.
------------------

யார் அந்த பார்பன் ?
தந்தை பெரியார் பார்பனன் என யாரை குறிப்பிடுகிறார் ...  அடுத்த புனைவில் தெரிய படுத்துகிறேன் .....

உங்களில் யாருகேன்னும் தெரிந்தால் தெரிய படுத்துங்கள் நண்பர்களே 

T.ராஜேந்தர் இளைஞர்களை மிரட்டப்போகிறார் ....

பத்திரிக்கை உலகம் “டல்” அடிக்கும் சமயங்களில் பத்திரிக்கையாளர்கள் சில விவகாரமான ஆட்களைப் பேட்டிக் கண்டு நிமிண்டி விடுவார்கள்.ஆட்கள் காரமாகவோ அல்லது லூசுத்தனமாகவோஅல்லதுஅரைவேக்காட்டுத்தனமாகவோ அல்லது புத்திசாலித்தனமாகவோ பேசி விவகாரமாகி அது ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் ஓடும்.வாசகர்களுக்கும் பொழுதுபோகும்.

அந்த லிஸ்டில்.....


T.ராஜேந்தர்,இளையராஜா,சு.சாமி,சோ,இளங்கோவன்,
ஜெயகாந்தன்,விவேக்,கலைஞர் மற்றும் சிலர் இதில் அடங்குவார்கள்.இப்போது T.ராஜேந்தர்.

அவர் விகடனுக்கு அளித்த பேட்டியில்வழக்கமாக “நான் எம்.ஜி.யார்,கலைஞர்,ஜெயலலிதான்னு மூணு பேரோடு மோதினவன்” என்று 1,00,008 தடவையாகச் சொல்லிவிட்டு “தமிழ் நாடே மிரளும்,காதல்ல உருளும்.காதல்தான் கதை.படத்தில் ஏ டு இசட் இசை மழை.அதில் வரும் ஏழு பாடல்கள் தான் இனிமே இளைஞர்களோட சொத்து.” என்று தன்னுடைய அடுத்தப்படத்தைப் பற்றி தன்னம்பிக்கையோடு சொல்கிறார்.

அண்ணா இதெல்லாம் ஒவரா தெரியலீங்களாண்ணா?

T.ராஜேந்தர் என்றாலே தன்னம்பிக்கையின் பிரதிநிதி என்று
சொல்லுவார்கள்.அவர் முதலில் தன்னையும் பிறகு சாகா வரம் பெற்றக் காதலையும்,(எகிப்து மம்மி செட் போட்டு டூயட்டில் பின்னுவார்) மீதியில் தங்கச்சிகளையும் நம்பி  படம் எடுத்து வெற்றிப்பெற்றவர்.

ஆனால் அது முன்னொரு காலத்தில்.Once upon a time.அவர் காலத்திய ”காதல் அழிவதில்லை” தாடி இளைஞர் ரசிர்களுக்கு ரிட்டையர்மெண்டுக்கு நாலோ அல்லது ஐந்து வருடம்தான் இருக்கிறது.ஒரு வேளைஅவர்களை மிரள வைப்பாரோ?

லேட்டஸ்ட் இளைஞர்கள் இவரின் ”வீராசாமி” (14 பாடல்கள்) என்ற படத்தைப் பார்த்துவிட்டு  மிரண்டு போய் வீட்டை விட்டு வெளியே  ஒரு வாரம் வராமல் இருந்தார்கள்.

அண்ணா ஏற்கனவே எடுத்த “சொன்னால்தான் காதலா” ”காதல் அழிவதில்லை”தமிழகம் மிரண்டதான்னா..? காதலில் புரண்டதான்னா?"ஏழு பாடல்கள் தான் இனிமே இளைஞர்களோட சொத்து " இதுவரை போட்டதெல்லாம் செத்தச்சா சொத்தச்சான்னா?

போங்கண்ணா,,, தட்டிப் பார்த்த கொட்டாங்குச்சிண்ணா! நீங்க ரொம்ப குறும்புங்கண்ணா.இது மாதிரி பேசின ஜனங்க ஒத்துக்க மாட்டாங்கண்ணா..!