Saturday, August 21, 2010

ஒரு புது முயற்சி



                             இந்த நடு ராத்திரியில் நான் ஏன் இப்படி யோசித்தேன் என தெரியவில்லை ... என் நண்பன் சுப்பு கூட ஒரு தடவை கேட்டான் ... உனக்கு எதற்கு இந்த வலைப்பூ ... நீ எதாவது எழுத வேண்டும்இப்படி படித்ததில் பிடித்தது என்று காப்பி அடித்து போட வேண்டிய அவசியமென்ன ? அவன் அப்படி கேட்டதில் தவறென்ன ? சரிதான் ... நான் ஏன் எனது கருத்துகளை மற்றவர்களிடம் திணிக்க வேண்டும் ? அது அவரவரது கருத்து சுதந்திரம் ...



                   எழுத்து துறையில் நானும் சாதிக்க வேண்டுமென்ன எண்ணியதுண்டு .... நான் ஒரு எழுத்தாளன் இல்லைதான் ( I am not a armature writer ) ... நான் எழுதினால் படிப்தற்கு யார் உண்டு என எண்ணியது கூட உண்டு ... எதையுமே செய்து பார்க்காமல் யோசிப்பது தவறு தான்... ஆனால் எதை எழுதி என் எழுத்துலக பயணத்தை அரம்பிப்பதென யோசித்தேன் ... ஒன்றும் வரவில்லை இந்த மரமண்டையில் , ஒரு நிண்ட பயணத்தில் ஆங்கில நாவலை (20 Still Virgin ? ? ?) படிக்கும் பொது உதித்த எண்ணம் , சொன்னால் சிரிக்க கூடாது . என் வாழ்கையோட்டதை ஏன் எழுத கூடாதென யோசித்தேன் .. ( சிரிக்க கூடாது .. என்ன சின்ன பிள்ளை தனமா இருக்கு ! . ! ). அந்த ஆங்கில நாவலின் கதை அப்படி தான் அமைந்தது .. எழுத்தாளன் வாழ்க்கையின் பின்னோக்கி பயணம் செய்கிறான் .... நானும் யோசித்தேன் .. என்னை வைத்து யாரும் படம் எடுக்க வாய்ப்பில்லைநானே என்னை வைத்து எடுத்தால் தான் ..... படிக்கும் நீங்கள் யோசிக்கலாம் ( எனக்கே தெரியும் இந்த வலைப்பூவை யாரும் படிக்க மாட்டார்கள் என ).. இவனை பற்றி எழுத இவன் என்ன அத்தனை  பெரிய சாதனையாய பண்ணி விட்டான் ?.. நான் எந்தவொரு சாதனையும் பண்ண வில்லை தான் , ஆனால் ஏன் ஒரு புது முயற்சியாய் என் வாழ்கையோட்டதை எழுத கூடாதென யோசித்ததன் விளைவு இந்த பதிவு . 

                     இது எனக்கு என் வாழ்கையை திரும்பி பார்க்க வைக்கும் .. நான் செய்த தவறுகள் மறுபடியும்  நிகழாமல் பார்த்து கொள்ள உதவும் என நம்புகிறேன்என் நினைவிலே மட்டும் வாழும் சில நிகழ்ச்சிகளின் மின்னணு  பதிவாக இருக்கும்இந்த நினைவுகள் சில நாள்களில் மறைந்து போகலாம்ஆனால் இந்த வலைப்பூ மூலமாக நிடித்து நிலைக்குமென நினைக்கிறன் .... படித்து கொண்டிருக்கும் நீங்கள் கூட இப்பொழுது யோசிக்கலாம் ... அப்படி என்ன தான் நடந்து விட்டது இவன் வாழ்கையில்

                        எனக்கே தெரியாமல் என் வாழ்க்கை ஒரு நிண்டபல திருப்பங்களை  கொண்ட ஒரு தொடர்கதையாக போய் கொண்டுதான் இருக்கிறது ....

                                   கண்டிப்பாக என் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வாய்ப்பு இல்லை தான்ஒரு சுவாரசியமான பதிவுகளாக இதனை கொண்டு செல்ல முயற்சிக்கிறேன் நண்பர்களே . இது ஒரு தம்பட்டம் அடித்து கொள்ளும் கதையாக அமையாமல் பார்த்துக் கொள்கிறேன்

                      இது  என்னை போன்ற ஒத்த கருத்துள்ள பல நண்பர்களை இணைக்கும் பாலமாக அமைய வேண்டுமென நினைக்கிறன் . பல கடந்து போன நண்பர்களை திரும்பி மனக்கண்ணில் பார்க்கும் முயற்சி எனக்கு . 

இந்த முயற்சி யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல. 

உங்களது மேலான கருத்துகளை பின்னோட்டம் மூலம் எனக்கு தெரிய படுத்துங்கள் . அது என் எழுத்துக்களை மெருகுட்ட பயன்படும்.  

இந்த பதிவை எழுதி முடித்த பிறகும் கூடஇந்த முயற்சி தேவைதானா என யோசிக்கிறேன் ... தற்பொழுது உள்ள சில நண்பர்களிடம் கருத்துகளை கேட்டு,  என் வாழ்கையில் பின்னோக்கி பயணம் செய்ய முடிவு செய்துள்ளேன் ..... பார்க்கலாம் .