Saturday, July 3, 2010

செம்மொழி போட்டோ டூன்ஸ்

















எக்ஸ்க்யூஸ் மீ! ஒரு கப் காபி சாப்பிடலாமா?



‘தி கேப்’ என்று அழைக்கப்படும் அந்த மலைமுகடு ஆஸ்திரேலியாவில் ரொம்ப ஃபேமஸ். தற்கொலை செய்துக்கொள்ளும் மகாஜனங்கள் கடைசியாக தரிசிக்கும் புண்ணியஸ்தலம். கிட்டத்தட்ட நம்மூர் ‘சூசைட் பாயிண்ட்’ மாதிரி வைத்துக் கொள்ளுங்களேன்.

புன்னகை மன்னன் கமல் சாடையில் ஒரு இளைஞன் கண்களில் கண்ணீரோடு குதிக்கத் தயாராகிறான். இளைஞன் என்பதால் தற்கொலைக்கான காரணம் காதல் தோல்வியாக தானிருக்கும். குதிக்க தயக்கம். பெற்றோர்களின் நினைவு காரணமாக இருக்கலாம். இருப்பினும் சோகம் மனதை அப்ப நீச்சல் வீரனின் பாணியில் கைகளை பின்னுக்கு இழுத்து கால்களைத் தூக்க முயற்சிக்க...

“எக்ஸ்க்யூஸ் மீ! என்னோடு ஒரு கப் காபி சாப்பிடமுடியுமா?” ஒரு வயதான குரல் கேட்கிறது.

ஏதோ சினிமாவில் வரும் இறுதிக்காட்சி இதுவென்று நினைத்துவிடாதீர்கள். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக சிட்னி துறைமுகத்தின் நுழைவாயிலான ‘தி கேப்’ பகுதியில் இக்காட்சி சகஜம். சராசரியாக வாரத்துக்கு ஒருவர் இங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். காப்பி சாப்பிட அழைக்கும் பெரியவரின் பெயர் டான் ரிட்சீ. இப்போது 84 வயதாகிறது. அந்த ஊர் எல்.ஐ.சி.யில் வேலை பார்த்தவராம். எனவேதான் உயிரின் அருமை அவருக்கு தெரிந்திருக்கிறது. அந்த தற்கொலை முகடுக்கு அருகிலேயே ரிட்சீயின் வீடு அமைந்திருக்கிறது.

“அவருடைய சிரிப்பு என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. புன்னகையோடு அவர் பேசிய கனிவான மொழிதான் இன்னும் என்னை உயிர்வாழ வைத்துக் கொண்டிருக்கிறது” என்கிறார் கெவின் ஹைன்ஸ். இவர் கடந்த 2000ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயற்சித்து ரிட்சீயால் காப்பாற்றப்பட்டவர்.

ரிட்சீ கணக்கில் கொஞ்சம் வீக். எனவே எவ்வளவு பேரை காப்பாற்றியிருக்கிறார் என்று துல்லியமான கணக்கெடுப்பு எதுவும் அவரிடம் இல்லை. 160க்கும் மேற்பட்ட உயிர்களை அவர் இம்மாதிரியாக மறுஜென்மம் எடுக்க வைத்திருக்கிறார் என்று அக்கம் பக்கத்தவர்கள் சொல்கிறார்கள்.

காப்பி சாப்பிடும் அந்த மூன்று நிமிட அவகாசம் போதும். எத்தகைய சோகமும் நீரில் உப்பு கொட்டியதைப் போல கரைந்துவிடும். தனது மன அழுத்தங்களை சூடான காபி அருந்தியபடியே, முழுமையான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெரியவரிடம் கொட்டினால் மனம் லேசாகிவிடாதா என்ன? – இதுதான் டான் ரிட்சீயின் டெக்னிக்.

“தற்கொலை எண்ணத்தோடு வருபவர்களிடம் மிகக்கவனமாக பேசவேண்டும். குதிக்காதே என்று கத்தினால் உடனே குதித்துவிடுவார்கள். சிலர் தத்துவங்கள் பேசுவார்கள். சிலர் நம்மை திட்டக்கூட செய்வார்கள். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பவர்களிடம் நிதானமாகப் பேசுவதின் மூலம், அவர்களது தற்கொலை உணர்வை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கலாம். சிலர் நீண்டநேரமாக விவாதித்துக் கொண்டே இருப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் ஜன்னலில் இருந்து எங்களை பார்த்துக் கொண்டிருக்கும் என் மனைவி, போலிசாருக்கு போன் செய்துவிடுவாள். போலிஸை பார்க்கும் யாரும் குதித்து விடுவதில்லை” என்கிறார் ரிட்சீ. இவரது மனைவி மோயாவும் இந்த தற்கொலை தடுப்புப் பணியில் இவருக்கு பெரும் உதவியாக இருக்கிறார்.

“இவ்வளவு உயிர்களை காக்கக்கூடிய இந்த அருமையான வாழ்வு எல்லோருக்கும் கிடைப்பது அரிதில்லையா?” என்று கேட்கிறது இந்த ஜோடி.

இப்பணியில் ஆபத்தும் இல்லாமல் இல்லை. ஒருமுறை இதுபோல ஒரு இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தபோது, திடீரென அவள் இவரையும் கட்டிக்கொண்டு குதிக்க முயற்சித்திருக்கிறாள். அச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ரிட்சீ உயிர் தப்பினார்.

சோகம் என்னவென்றால் டான் ரிட்சீ இப்போது கேன்சரோடு யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார். “என்னுடைய மனநிலையோடு ஒருவன் கூடவா இந்த உலகில் இல்லாமல் போவான்? என் காலத்துக்குப் பிறகு அவன் வந்து இந்த தற்கொலைத் தடுப்புப் பணியை திறம்பட செய்வான்!” என்று நம்பிக்கையோடு இறுதிநாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் இந்த 84 வயது இளைஞர்

படித்து ரசித்தது ..... luckylookonline.com

கவிதைகள்


எனக்கு பிடிக்காமல் போனவைகள் பற்றி
எப்போதும் நான் சிந்தித்ததில்லை
ஆனால்
கவிதைகள் எனக்கு பிடிக்காமல்
போனபோது கொஞ்சம்
யோசித்துப்பார்த்தேன்
கவிதைகளை எனக்கு
மிகவும் பிடித்திருந்தது
அப்போது நான்
கவிதைகளை படிக்கத் தொடங்கவே இல்லை
கவிதைகள் என்றால்
புல்லரிக்கும் எனக்கு
அப்போதெனக்கு
கவிதைகள் புரிவதேயில்லை.
கவிதைகள் புரியத்தொடங்கியபோது
கவிதையே வாழ்க்கையானது
கவிதைகளை நான்
கிறுக்கத் தொடங்கிய போதுதான்
கவிதைகள் கொஞ்சம்
உதைக்கத் தொடங்கியது
கவிதைகளை நான்
யோசித்தபோது
கவிதைகள் எனக்கு
வெறுக்கத் தொடங்கியது
கவிதைகள் எனக்குள்
தானாய் வந்தபோது
கவிதைகள் எனக்கு
சுத்தமாய் பிடிக்காமல் போனது.
ஏனென்றால் கவிதைகள்
உண்மைகளை சொல்லிவிடுகின்றன
எனக்கு பிடிக்காமல் போனவைகள் பற்றி
நான் சிந்திப்பதேயில்லை

வைரமுத்து கவிதைகள்

வைரமுத்துவின் கவிதைகள் தமிழில் ............... படித்து ரசிக்க..........

http://www.scribd.com/search?cat=redesign&q=Vairamuthu&x=0&y=0

Tuesday, June 29, 2010

அமெரிக்கர்களுக்கு யாரைப் பிடிக்கும்?

அமெரிக்காவில் சர்வே ஒன்று நடத்தியிருக்கிறார்கள். அமெரிக்கர்களுக்கு எந்தெந்த நாடுகள் பிடித்திருக்கின்றன, எந்தெந்த நாடுகள் பிடிக்கவில்லை? தெரிந்துகொள்ள கீழே உள்ள வரைபடத்தைப் பாருங்கள்.



பிடித்த முதல் நாடு, கனடா. பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக இந்தியா. பிடிக்காத நாடுகளில் கடைசி இடம், இரானுக்கு. 29 சதவீதம் பேருக்கு க்யூபா பிடித்திருக்கிறது. ரஷ்யாவை 47 சதவீதம் பேரும், சீனாவை 42 சதவீதம் பேரும் விரும்பியிருக்கிறார்கள்.

இராக்கை கவனியுங்கள். 73 சதவீதம் பேர், வேண்டாம் என்று ஒதுக்கியிருக்கிறார்கள். பிடிக்கும் என்று வாக்களித்த 23 சதவீதம் பேரில், புஷ், ஒபாமா, ராணுவத்தினர் ஆகியோர் இருக்கக்கூடும். எழுபது சதவீதம் பேருக்கு பாலஸ்தீனம் ஏனோ பிடிக்கவில்லை. ஆப்கனிஸ்தானை 79 சதவிதம் பேர் நிராகரித்திருக்கிறார்கள்.

அமெரிக்கர்களின் மனநிலை இதுதான் என்று இந்த ஒரு சர்வேயை வைத்து திட்டவட்டமாக முடிவுசெய்துவிடமுடியாது என்றாலும் சில Patterns-ஐ புரிந்துகொள்ளமுடிகிறது.

மக்களின் விருப்பு, வெறுப்புகளை பெரும்பாலும் அரசாங்கமே தீர்மானிக்கிறது. இரானில், இராக்கில், ஆப்கனிஸ்தானில் அமெரிக்கா போர் தொடுத்துக்கொண்டிருக்கும் காரணத்தால், அந்நாடுகள் குறித்து மாறுபட்ட அல்லது திரிக்கப்பட்ட செய்திகளே அதிகம் வெளியிடப்படுகின்றன. அந்த நாடுகளை அமெரிக்காவுக்குப் பிடிக்காது. எனவே, அமெரிக்கர்களுக்கும். கனடாவும் பிரிட்டனும் ஜெர்மனியும் ஜப்பானும் அமெரிக்காவுக்குத் தேவை. அவர்களுடனான உறவு லாபகரமானது. எனவே, அமெரிக்காவுக்கு அந்த நாடுகளைப் பிடிக்கும். எனவே, மக்களுக்கும் பிடித்திருக்கிறது.

சீனா வளமான நாடு. சீனாவுடன் தொழில், வர்த்தக உறவு கொள்வேண்டியது அத்தியாவசியம். என்றாலும், சீனாவை பிடிக்காதவர்களின் சதவிதம் அதிகமாக இருப்பதற்குக் காரணம், சீனா ஓர் அச்சுறுத்தும் போட்டியாளர் என்பதால்தான்.

இந்தியாவில் இப்படியொரு சர்வே எடுத்தால் என்ன ஆகும்? அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், பிரிட்டன் ஆகிய நாடுகளை எத்தனை பேருக்குப் பிடிக்கும்? எத்தனை பேருக்குப் பிடிக்காது?

ஏன்?