
இத்துணை சிறப்புக்கும்/புகழுக்கும் காரணமாக இருந்தது முகலாய சாம்ராஜ்ஜியத்தின் ஐந்தாவது சக்ரவர்த்தி ஷாஜஹான். மும்தாஜ் மஹால் ஷாஜஹானின் இரண்டாவது மனைவி மட்டுமல்ல, மன்னருக்கு மிகப்பிடித்தவரும் கூட. பெர்ஷிய நாட்டின் இளவரசியான மும்தாஜ் மஹாலின் இயற்பெயர் ‘அர்ஜுமென் பானு பேகம்' என்பதாகும். தன்னுடைய 14-வது (சிலர் 13-வது என்றும் கூறுவதுண்டு) குழந்தையை ஈன்றெடுக்கும் போது இறந்த இவர் தன் இறுதி விருப்பமாக இதுவரை உலகம் கண்டிராத வகையில் ஒர் நினைவுச்சின்னம் எழுப்பப்பட வேண்டுமென்று தன் அன்புக்கணவர் ஷாஜஹானிடம் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், மத்திய ஆசியாவிலிருந்தும் கட்டுமானப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன. இப்பணியில் சுமார் ஆயிரத்திற்கும் மேலான யானைகள் ஈடுபடுத்தப்பட்டன.
பளிங்கு கற்கள் சீனாவிலிருந்தும், வைரங்கள் பன்னாவிலிருந்தும், சிவப்புக் கற்கள் பதேபூர் சீக்ரியிலிருந்தும், நீலக்கற்கள் இலங்கையிலிருந்தும் கொண்டுவரப்பட்டன. முதன்மைப் பொருளான வெள்ளை மார்பில்கள் ராஜஸ்தான் மாநிலத்திலிருக்கும் கல்குவாரியிலிருந்து கொண்டுவரப்பட்டன. இதற்கான உத்தரவுகள் ராஜா ஜெய்சிங்குக்கு பிறப்பிக்கப்பட்டதற்கான ஆவனங்களை இன்றுகூட தாஜ் அருங்காட்சியகத்தில் காணலாம்.
313 ச.அ (93.9 ச.மீ) பரப்பளவில் கட்டப்பட்டுள்ள தாஜ்மஹாலின் மேல் விதான மாடம் மையத்திலிருந்து 187 அடி உயரம் கொண்டது. ஸ்தூபிகள் ஒவ்வொன்றும் 137 அடி உயரம் கொண்டதாகும். சமச்சீராக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு மிகச் சிறந்த/பொருத்தமான உதாரணமெனில் அது தாஜ்மஹால்தான் என்று கூறப்படுவதற்கு காரணம், அதன் இருபுறமும் சிவப்புக்கற்களால் கட்டப்பட்டள்ள கட்டிடங்களேயாகும். மேற்குப்புறத்திலிருப்பது மசூதி, கிழக்குப்புறத்திலிருப்பது விருந்தினர் மாளிகை/அருங்காட்சியகம். நீர்வழிப்பாதைகளும், நீரூற்றுகளும் இச்சமச்சீர் தோற்றத்திற்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

தாஜ்மஹாலை வடிவமைத்தவர் ‘உஸ்தாத் அஹமது லஹாரி' என்று கூறப்பட்டாலும் அதற்கான உறுதியான சான்றுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. மேலும் இதைப்போலவே பிறிதொரு கட்டிடம் எழுப்பப்பட்டுவிடக் கூடாதென்பதற்காக அனைவரது கட்டைவிரல்களும் துண்டிக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி உலவுகிறது.
இற்றைய நிலையில், யமுனை ஆற்றங்கரைக்கு அழகு சேர்த்திடும் தாஜ்மஹாலைக் காண கோடிக்கணக்கானோர் வந்துகொண்டிருந்தாலும், அதனை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு இன்றுவரை ஒருவர்கூட உண்மையாக முன்வராதது தாளவொனாத துயரத்தில் ஆழ்த்துகிறது. இனியும் விழித்துக்கொள்ளாவிடில் தாஜ்மஹால் நமக்கும் ஒரு நினைவுச் சின்னமாகிவிடும்.
நன்றி : தமிழ் கபே
No comments:
Post a Comment