Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, July 7, 2010

கவிதைகள்

பழைய மனிதன்
எல்லா இடங்களிலும்
ஏதோ ஒரு பைத்தியம்
கழுத்து பிளாஸ்டிக் மணியைத்
தொட்டுக்காட்டி
சிதைவுண்டு போன பற்களை
வெளிப்படுத்தி
அதிர்ச்சியூட்டும் சிரிப்புடன்
காசு வாங்கிச் செல்கிறது
தன்னைக் கண்டு பயப்படும்
மனிதனைக் கண்டு அருவருக்கும்
பைத்தியத்தின் உடலில் முன்பு
மனிதனாயிருந்த தன்
அடையாளங்கள்
நிறையவே உள்ளன.
உயிர்
நான்கு நாட்களாக
கிழிபடாமலிருக்கும்
நாட்காட்டியில் தொடங்கி
அறைக்கதவின் உட்பக்கத் தாழ்
தொட்டு
சுழலாத மின்விசிறியின்
உச்சிக்குச் சென்று
இறுகித் தொங்கும் நைலான் கயிற்றின்
வழி கீழிறங்கி படரும்
தன் வாழ்விடத்தின் வாசலை
பின்னத் தொடங்குகிறது
அச்சிலந்தி
பிதுங்கிய அவ்விழிகளின்மீது.