Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

Monday, April 16, 2012

நீ தேவையில்லை எனக்கு.

பெண்ணே !!

நண்பன் வினவுகிறான் .. பிரிந்துவிட்டிர்களா ? (நக்கலான ஒரு வியப்புடன்)..

ஏன்? ஏதற்காக ? ஏப்படி ? யார் காரணம் ?

நானும் இந்த 3 வருட காலத்தில் யோசித்து பார்க்கிறேன்.

காரணம் நீயா ? நானா ? எனக்குள் விடை காணமுடியவில்லை.

இனி யோசித்தும் ஒன்றும் ஆக போவதில்லை. இந்த 3 வருடத்தில் இரு முறை நேரில் பார்த்துள்ளேன்.

நேரில் பார்த்தபொழுது நீ காண்பித்த முக பாவம், பயம் .. அப்பட்டமான பயம், எங்கே பேசி விடுவானோ என்று.

எனக்கே தெரியவில்லை, ஏன் ? எதற்கு ?

காதல் (அப்படி ஒன்று நமக்குள் இருந்ததாம், ஊர் சொல்கிறது) என்கிற விளையாட்டு நமக்குள் நடக்கும் பொழுது,

நான் எப்படி இருந்தேனோ அப்படியே ஏற்றுக் கொண்டாய் , நானும் உன்னை அப்படியே ஏற்றுக் கொண்டேன் !

இல்லை இல்லை, நீ எனக்கு தேவையென நீ, எனக்கு நீ தேவையென நான் சொன்ன பொழுது கூட, என் நண்பி எச்சரித்தாள்.

ஆனால், காலம், விதியால் நம் உறவு கல்லூரியின் கடைசிவருடத்தில் காதலாய்(!) மாறியது.

ஆனால், அதற்கு மேல் திருமணம் என்ற உறவிற்க்குள் நுழைய நீ மறுப்பாய் என நான் யோசித்தது கூட இல்லை.

நம் கல்லூரி நாட்களில், உனக்கு நான் சரி வரமாட்டேன், உன் தகுதிக்கேற்ப ஒருவன் உனக்கு கிடைப்பான் என

நான் சொன்ன பொழுது, நீ விட்ட கண்ணீர் இன்னும் என் மனக்கண்ணில் நிற்க்கிறது. அந்த ஈரம் கூட காயவில்லை என்னுள்.

கல்லூரி முடிந்ததும், விரிசல் விட ஆரம்பித்த நம் உறவு, ஏனோ வெகு வேகமாய் பிரிந்தது. நான்கூட, நாம் விட்டுக் கொண்ட

செல்ல சண்டைகளில் இதுவும் ஒன்று என்றெண்ணி, வேலை தேட..

வேலை கிடைத்தால், உன்னை உன் விட்டில் இருந்து தூக்கி வந்து விடலாம் என்ற உத்வேகத்தில்

வேலை தேடினேன், வேலை கிடைத்ததை உனக்கு குறுஞ்செய்தி அனுப்பி, பதிலிலாமல் நான் உன்னை மறக்கவும் முடியாமல்,

6 மாதங்கள் பைத்தியமாய் இரவு துக்கம் தொலைத்ததை நீ அறிவாயா ? இல்லை இந்த ஊர் அறியுமா ?

உன்னை பல வழிகளில் தொடர்பு கொள்ள முயன்றபொழுது, பதில்மொழி இல்லாமல் கல் நெஞ்சாய் இருக்க எப்பொழுது, யாரிடம்

கற்றுக் கொண்டாய், யாருடைய தொடர்பும் இல்லாது வடகிழக்கில் காலம் தள்ள நான் கற்றுக்கொண்டேன்.

நீ மேற்க்கொண்டு படிக்கிறாய் என்று கேள்விப்பட்டு, உன்னை கல்லூரியில் பார்த்துவிடலாம் என எண்ணி,

அடுத்த நாளே, விமானம் பிடித்து வந்து கல்லூரியில் காலைமுதல் அலைந்து, மாலையில் உன்னை கண்ட பொழுது,

ஓரே வரி பேசி, அதனால் கல்லூரியில் நான் கேள்விகளால் துளைக்கப்பட்டது உனக்கு தெரியுமா ?

ஏனோ நேரில் 2 வருடம்கழித்து, பார்க்கும் போது ” நன்றாக இருக்கிறாயா ?” என ஒரு வரிக்குக் கூட ம்ம்ம்ம் எனப் பதில்

சொன்ன உனக்கு, அதை கூட திரும்பி கேட்க மனமில்லை !

இப்பொழுது நண்பன் ஒருவன் விளையாட்டாய் சொல்கிறான், தூக்கிறாலாமா ? இவர் உயிர் கொடுத்தாவது (!) உன்னை சேர்த்து வைக்கிறேன் என்று.

என்னால் எப்படி சொல்லமுடியும். நீ வேண்டுமென்று.!

எனக்கு நீ தேவையில்லை. எனது காதலி (!), எனது மனைவி என்னுடன் இருக்கிறாள் !

உன்னுடன் நான் கொண்ட உறவு, கல்லூரி முடிய என நீ முடித்துவிட்டாய் ! என்னால் முடியவில்லை என் கண்ணே !

எப்பொழுதும், நீயும் உன் நினைவுகளும் என்னுடனே உள்ளது, என்னவளை நான் கந்தர்வ மணம் முடித்துள்ளேன்.

நீ தேவையில்லை எனக்கு.